எங்கும் பரவிடம் தீபாவளி! /ம.சக்திவேலாயுதம்

புற இருளை அகற்றிடவே விளக்கேற்றி கொண்டாடுகிறோம் தீபாவளியை…

இப்போதோ நம் அகம் முழுவதும்

ஆட்கொண்டுவிட்ட இருள்..

அக ஒளியேற்றினால் நித்தமும்

நமக்கு தீபாவளியே!

பலகாரங்களும் இனிப்புகளுமாய்

கொண்டாட இனிக்கிறது தீபாவளி…

இல்லாவதவர்களிடமோ ஏக்கமும் யோசனைகளுமாய் தவிக்கிறது…

நம் பகிர்ந்தளித்தலால்

எங்கும் பரவிடம் தீபாவளி! *