விலங்குகளின் பிராத்தனை/சாந்தி சரவணன்

கவிதை

யானை மீது சவாரி சென்றாள்
சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில் புன்னகை!

குதிரை மீது சவாரி சென்றாள்
சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில் புன்னகை!

ஒட்டகத்தின் மீது சவாரி சென்றாள் சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில்
புன்னகை!

மனிதரோடு சவாரி சென்றாள் சிறுமி
சவாரி முடிந்தது

பக்கத்து தெருவின்
குப்பை தொட்டியில்
சவமாய்க் கிடந்தாள்
சிறுமி!

“மனித குணம் மாறாதா?”
பிராத்தனை செய்தன
வன விலங்குகள்.

திருமதி.
9884467730