அழகியசிங்கர்/கிணறு ஓர் அதிசயம்

என் தங்கை மகேஸ்வரி வீட்டில் தான் இந்த அதிசயம் நடந்தது. ஒரு கிராமத்தில் வசித்து வந்ததால் என் பையன் சந்துருவை அனுப்பி வைத்தேன். அவன் கிராமத்து வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தில்தான் அனுப்பி வைத்தேன்.

அவளுடைய கிராமம் மாயவரத்திலிருந்து மறையூர் என்ற இடத்திலிருந்தது.

ஒரு வாரம் கழித்து. என் பையனை அழைத்து வர போனேன்.

“எப்படி இருக்கான் பையன் என்று கேட்டேன்.

” கிணற்றை விட்டு வர மாட்டேங்கிறான்.. 24 மணி நேரமும் கிணற்றில் குளிக்க வேண்டுங்கிறான்” என்றாள் அவள்.

“அப்படியா ! அவன் சென்னையில் குளிக்கவே மாட்டேன் என்பான்.. ரொம்ப தொந்தரவு செய்தால்தான் குளிப்பான்..” என்று கண் சிமிட்டியபடி சந்துருவைப் பார்த்தேன்.

“அப்பா… இங்கயே இருந்திடலாம்பா. கிணறு ரொம்ப புடிச்சிருக்கு..” என்றான் சந்துரு.