**

பூ.சுப்ரமணியன்
ஒவ்வொரு மாணவன்
வரைந்த குதிரை ஓவியம் பார்த்து
கண்டு மகிழ்ந்தார் !
ஒரு மாணவன் வரைந்த
ஓவியத்தில் குதிரை
வால் மட்டும் இருந்தது!
ஆசிரியர் கோபத்துடன்
அந்த மாணவனிடம்
உன் ஓவியத்தில்
குதிரை எங்கே?
மாணவன் கைகட்டி
குதிரை அந்தப்பக்கம்
திரும்பி குனிந்து
புல்லை மேய்கிறது சார்!
பதில் கேட்டு வியந்து
மாணவன் முதுகை
தட்டி பாராட்டினார்!

கவிதைகள் அருமை
நன்று!