இணையக்கால கவியரங்கம்
மலை மலையாய்
எழுதுகிறார்கள்
பிரமித்துப்போகிறோம்
யதார்த்தத்தில் எப்படி எல்லாமோ வாழ்கிறார்கள்
சிலர் இலக்கிய மகுடம்
பெறுகிறார்கள்
ஆயின் என்ன?
அவர்கள் மீது மதிப்பில்லை
எனக்கு
எழுதிய வண்ணம்
கிஞ்சித் தேனும் வாழ்ந்து காட்டினால் வாழ்த்திப்
பாராட்டலாம் வணங்கி
மகிழலாம்.
திறமையும்
ஆற்றலும் உச்சத்தில்
இருப்பதால் மட்டும் என்ன
அடுத்தவனுக்கு நல்லன
சாதிக்க பயன்படுகின்றனவா
என்பதே மனிதனை அளக்கும் அளவுகோல்.
எதிரில் இருப்போரை
தூசாக மதித்து விட்டு
ஆயிரம் எழுதி என்ன ஆவதற்கு ?
இவை பித்தலாட்டங்கள் சுயநலத்திற்குப்பற்பல வேடங்கள் un
கண்முன்னே அலுத்துக் போகிறது நடப்பு.
மனிதனாய் வாழாதவன்
பேனாவை கீழே போட்டால்
உலகம் உருப்படும்.