எஸ்ஸார்சி/அம்மா சொன்னது

இணையக்கால கவியரங்கம்
30/11/23

என் வயதான அம்மா
சொன்னாள்
உனக்கும் வயதாகும்
ஒருநாள் தள்ளாமை வரும்
மருமகள் ஏதேனும் தின்னக்
கொண்டு தந்தால்
இப்போது வேண்டாம்
பிறகு கொடேன்
சொல்லிவிடாதே
வாங்கு அதனை உன் அருகில்
இருப்பில் வை
மறந்துவிடாதே
பசி எடுக்கும் உனக்கு
போனது எதுவும் திரும்ப வராது ஒருபோதும்.
எனக்கு அனுபவமானதை
உனக்குச் சொன்னேன்
பாக்கி இருந்தது
இது ஒன்று
அதையும் சொல்லிவிட்டேன்
பிறகு உன்பாடு
இல்லை திண்டாடு.