்் ்்
பூமிபிளந்து போனவள்…
திரும்பவருகிறாள் கோபம் தணிந்து…
தன்கதைதான் மீண்டும்…மீண்டும் பேசப்படுவது கண்டு திகைக்கிறாள்…கற்புக்கு தன்னை அலகாக்கிப் பேசுவது சிரிப்பு வருகிறது….
மாற்றுக்கு யாரும் பெண்களே இல்லையோ…!
தனக்கு கிடைக்காத ஒன்று…
இன்றையப் பெண்களிடையே
காண்கிறாள் புதியகாட்சியாய்.
மீண்டும் மானிடப்பெண்ணாய் வாழ்ந்துபார்க்க ஆசை…
விட்டதைப்பிடிக்க இதொன்றும் விளையாட்டில்லை.
நீதிமன்ற நிலுவை வழக்குகளெல்லாம்…அவள்
கதையை மிஞ்சிவிடும்போல்
இருக்கிறது…
தீக்குளிக்கச்சொல்லாமல்
தீர்ப்பெழுதுகிறார்கள்…அவ்வளவுதான்
மறுபடியும் பயம்…வந்தவழியே திரும்புகிறாள்.
அவள் கற்புக்கதைதான் இருக்கிறதே…எத்தனை ஆண்டுகாலமானாலும் பேச… அப்புறமென்ன…?
♦.