சசிகலா விஸ்வநாதன்/மழையை ஏன் பிடித்திருக்கிறது.

இன்றைய அழகிய சிங்கரின் என்பா
( 1 )
என் காலை நடைப்பயிற்சி இல்லை!

காலை கீழே வைக்க இயலவில்லை

எப்படி நான் சொல்வேன்; இன்று:

மழையை ஏன் பிடித்திருக்கிறது.

             (2)

இப்போதுதான் கிடைக்கும் , அருமை
நாரத்தங்காய்:

உப்பு போட்டு பாடம்
செய்துள்ளேன்;

மழை வர; அழுகை வருகிறது:

மழையை ஏன் பிடித்திருக்கிறது.

            (3)

அடை மழை! பள்ளி விடுமுறை;

பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்!
பெற்றவளுக்கு திண்டாட்டம்;

நிமிடம் ஓய்வில்லை
சேற்றுப்புண் காலுடன்;

மழையை ஏன் பிடித்திருக்கிறது!

         ( *4* )

விடா மழை ; அரசு விடுமுறை;

தொண்டையில் இறங்கும் சூடான காஃபி!

இந்த காரணங்கள் போதுமே;சொல்வேன்

மழை ஏன் பிடித்திருக்கிறது.

       ( *5* )

இன்று நடைபெற்ற
கிரிக்கட் போட்டியில்

மழையின் தயவால்
இந்தியா வெற்றி

இது போதாதா; நான் சொல்ல

மழை ஏன் பிடித்திருக்கிறது.


3-12-2023