இனிக்கும் தமிழ் – 32


      டி வி ராதாகிருஷ்ணன்

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள்

அறையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே?

 பெண்கள் அறையில் ஒதுங்கிக் கிடந்தால் தீட்டு, அவர்கள் குளிக்கும்
அறையில்குளித்தால் தீட்டு, தாரைத் தப்பை சப்தத்துடன், பிறந்தால் தீட்டு,
இறந்தால் தீட்டு என்றுசொல்கின்றீர்களே! இவ்வுடம்பில் உயிரில் உள்ள
தீட்டோடுதானே ஈசன் பொருந்தி இருக்கின்றான். அதனை அறியாமல் தீட்டு என்று
ஒதுக்குவதில் என்ன பயன் கண்டீர்கள்?

             

2 Comments on “இனிக்கும் தமிழ் – 32”

Comments are closed.