பி. ஆர். கிரிஜா/வலி

எழுந்திருக்க முடியாமல் பத்து நாட்களாக அவதிப் பட்டுக் கொண்டிருந்தாள் விமலம் பாட்டி. பேரன் வந்து டாக்டரிடம் கூட்டிச் செல்வதாக சொல்லி இரண்டு நாட்கள் ஓடிப் போய் விட்டது. அவன் வந்த பாடில்லை. முதுகு வலி தாங்க முடியவில்லை. நிமிர்ந்தும் உட்கார முடியவில்லை. தனிமையின் கொடுமையை மேலும் அதிகரிக்கிறது. அப்போது கையில் உள்ள கை பேசியில் ஒரு குறுஞ் செய்தி. அடுத்த நாள் காலை அவள் மகனும் மருமகளும் வந்து அவளை தங்களுடன் அழைத்துப் போவதாக செய்தி அனுப்பி இருந்தான்.
அவ்வளவுதான், விமலம் பாட்டிக்கு வலி போன இடம் தெரியவில்லை. உடனே நிமிர்ந்து உட்கார்ந்தாள். எழுந்து நடக்க முடியும் என்ற நம்பிக்கை
வந்தது. அப்போது வாசலில். அழைப்பு மணி. பேரன் நின்று கொண்டிருந்தான். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவனுக்கு சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து எழுந்து நடக்க முற்பட்டாள் விமலம் பாட்டி.


11/12/2023
9 pm

One Comment on “பி. ஆர். கிரிஜா/வலி”

Comments are closed.