மாடியில் இருந்து சத்தம் வந்து கொண்டிருந்தது. ஒரு கிழவி தெருவைப் பார்த்துக் கத்திக் கொண்டிருக்கிறாள். தெருவில் போவோர் வருவோரைப் பார்த்து.
இந்தக் கிழவியின் குரல் தெருவில் போவோர் எல்லோரையும் விரட்டியது.
தினமும் மாலை ஆறிலிருந்து இப்படித்தான் கிழவி கத்திக் கொண்டிருப்பாள்.
அவள் கூட நெருங்கியவர்கள் யாருமில்லை.
அவள் ஏற்பாடு செய்த நர்ஸ்தான் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
என்ன காரணத்தால்?
சில மாதங்களுக்கு முன் அவள் மடியில் பேரனை வைத்துக் கொண்டிருந்தாள். வெளி நாட்டிலிருந்து வந்திருந்தான் பேரன். எட்டு மாதக் குழந்தை.
அவர்கள் திரும்பவும் இந்தியா விட்டுப் போய் விட்டார்கள்.
பிரிவை கிழவியால் தாங்க முடியவில்லை.
அன்றிலிருந்து பேரனின் நினைவால் கத்திக் கொண்டிருக்கிறாள்.
பாவம் கிழவி!