தேவி பாரதி நாவலுக்கு சாகித்திய அக்காதெமி இந்த ஆண்டு பரிசு கிடைத்து விட்டதாக முன்னதாகவே தகவல் வந்துவிட்டது.
ஆனால் இன்னும் சாகித்திய அக்காதெமி அதிகாரப்பூர்வமாக இந்தத் தகவலை உறுதி செய்யவில்லை.
எல்லோரும் விழுந்து அடித்துக் கொண்டு. தேவி பாரதியைப் பாராட்டி தள்ளி விட்டார்கள் முகநூலில்.
தமிழில்தான் இதுமாதிரியான வேடிக்கையான சம்பவங்கள் நடைபெறும்.
இது யாருடைய சதி என்பது தெரியவில்லை.
யார் இது மாதிரி அவசரக் குடுக்கையாக இருந்து கொண்டு செய்தி வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை.
உண்மையான தகவலா பொய்யான தகவலா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
இதனால் பாதிக்கப்படப் போவது தேவி பாரதியைத் தவிர வேறு யாருமில்லை.
பரிசு பெற எல்லா தகுதியும் உடையவர் தேவி பாரதி.
கதைகளும் கட்டுரைகளும் எழுதி இருக்கிறார்.