
இன்று மாலை வாசித்த கவிதை.
ஆண்டவனின் வளாகத்தில்
அன்று
குறை தீர்க்கும் வரம்தரு நாள்.
பொன்
வேண்டும்,பெண் வேண்டும்,
மாடிமனை
வேண்டும், புகழ் வேண்டும்,
பிறவாமை
வேண்டும்.கோரிக்கைகள் பலப்பல.
என்முறை;
உனக்கென்ன வேண்டும்?
குழந்தை வரம்..
மகனா? மகளா?.
முதலில் மகன்.
எப்படி?
அறிவாய்,அழகாய்.,..
தந்தோம்.
அடுத்து மகள்..
எப்படி?.
அறிவாய்,அழகாய்..
ஆயுள் வேண்டாமா?
ஆமாம் ஆயுளும் வேண்டும்.
அப்படியே
தந்தோம்.
மகனுக்கு மறந்தேனே,
ஆயுள்
சேர்க்க வேண்டும் இறைவா.
இந்த
பிறவிக்கு முடிந்தது வரம்.
அசைகிறது
எனது
இல்லற
அஸ்திவாரம்.
