ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 58

25.12.2023 – திங்கட் கிழமை

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
 மோகினி:  புத்தகக் கண்காட்சிக்குப் புத்தகங்கள் தயாரிக்க வில்லையா?
அழகியசிங்கரவந்து விட்டது.  சனிக்கிழமை மட்டும் 3 புத்தகங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டேன். இந்த ஆண்டு 5 புதிய புத்தகங்கள் வராமலிருக்காது. 
ஜெகன் :  என்னன்ன புத்தகங்கள்.
மோகினி : சொல்லாமல் ஆச்சரியப்படும்படி கொண்டு வரவேண்டுமென்று நினைக்கிறீர்களா?
அழகியசிங்கர் :  அப்படியொன்றுமில்லை.  க.நா.சு. லாசரா, நகுலன் புத்தகங்கள் தவிர நான் தயாரித்த இரண்டு புத்தகங்கள்.
மோகினி :  எந்தப் புத்தகம் சிறந்த புத்தகமாக அமையப் போகிறது?
அழகியசிங்கர் :  க.நா.சு கவிதைகள்.  
ஜெகன் : அதில் என்ன விசேஷம்?
அழகியசிங்கர் :  ஞானரதம் பத்திரிகையில் வெளிவந்த கவிதைகளையும் சேர்த்திருக்கிறேன்.
மோகினி :  அப்பச் சிறப்பாகத்தான் இருக்கும்.              
அழகியசிங்கர் : க.நா.சு கவிதைகள் 100 கவிதைகள் கண்டெடுத்திருக்கிறேன்.
மோகினி :  இன்றைய  இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.
அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.
ஜெகன்: இன்று பேசியது போதும்.
அழகியசிங்கர்.  இரவு வணக்கம்.
                    (இரவு 10.30 மணிக்கு)