நாத்திக தோழர்/சாந்தி ரஸவாதி

அடையாறு பிரபல பெருமாள் கோயில் எதிரில் பிரிண்டர் கடையில் தோழர் பாலு மும்முரமாக ஆண்டு பொது கூட்ட சுற்றறிக்கைகள் ப்ரூஃப் பார்த்துக்கொண்டிருந்தார்.

பாலுவுக்கு கடவுள் காத தூரம். தளராத தன்னம்பிக்கை அயராது சங்கப்பணி இதுவே தாரக மந்திரம்.

திடீரென சின்ன வேட்டி கட்டி திருமண் தரித்து ஒரு குழந்தை இவர் சட்டையை பிடித்து இழுத்து” தாத்தா உம்மாச்சி ஊஞ்சல் ஆடறா வா தூக்கி காமி” என்று பிடித்து இழுக்க செய்வதறியாது கட்டுண்டு முதன்முதல் பாதம் பிரகாரத்தை ஸ்பரிசிக்க ,அடுத்த நாளும் குழந்தையை தூக்கி பெருமாள் தரிசனம்.மூன்றாம் நாள் குழந்தையைக் காணாமல் தானே
உள்ளே செல்ல குழந்தைக்கு வலிப்பு. தாயார் , கைங்கர்யம் செய்யும் பெண்மணி, பதறினாள்.
தோழர் ஆம்பூலன்ஸ் ஏற்பாடு செய்து, ஆஸ்பத்திரியில் 24 மணி நேரம் கழித்து தான் எதுவும் சொல்ல முடியும் என்று சொல்ல,
பெருமாளிடம் “என்னை நாத்திகனாகவே இருக்க விடு”. கைகள் தானாக கூப்பின.

One Comment on “நாத்திக தோழர்/சாந்தி ரஸவாதி”

  1. ஆஹா, நாத்திகனாக இருக்கக்கூட ஆத்திகனாக இருந்து சாமியிடம் வேண்னிக் கொள்ள வேண்டியுள்ளது.
    அருமை

Comments are closed.