அழகியசிங்கர் பேசுகிறேன்

வணக்கம்.

அழகியசிங்கர் பேசுகிறேன்.
சென்னை 47வது புத்தகக் கண்காட்சி முன்னிட்டு. 7 புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளேன்.
இது சாத்தியமா என்று முதலில் எனக்கு தோன்றவில்லை. டிசம்பர் மாதம்தான் நான் புத்தகங்களைத் தயாரிக்கத் தொடங்கினேன். ஏழு புத்தகங்களை கொண்டு வர முடிந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இன்னும் 3 புத்தகங்கள் புத்தகக் காட்சி முடிவதற்குள் வர வாய்ப்புள்ளது. நான் விரும்புகிற மூத்த எழுத்தாளர்களான நகுலன், லா.ச. ரா. புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளேன்

புத்தகங்களை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

கநாசு படைப்புகள் என்ற தலைப்பின் கீழ் க.நா.சு கவிதைகள் 9 வது புத்தகமாக் கொண்டு வந்துள்ளேன்.

110 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. ஞானரதம் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தபோது, ஏராளமான கவிதைகளை எழுதி இருந்தார்.

அவற்றையெல்லாம் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன்.

அவர் கவிதையைக் குறித்து என்ன நினைக்கிறார் என்பதையும் கொண்டு வந்துள்ளேன்.

அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

244 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் விலை ₹ 250. முகநூல் வாசகருக்காக ரூ.200 அனுப்பினால் போதும்.

Google No. 9444113205