மனுஷ்ய புத்திரன் கவிதை

இந்த ஆண்டின்
கடைசி நாளில்
என்ன செய்துகொண்டிருக்கிறேன்?

எப்போதும்போல
எழுதிக்கொண்டிருக்கிறேன்

அடுத்த ஆண்டின் முதல் நாளில்
என்ன செய்வேன்?

எப்போதும்போல
எழுதிக்கொண்டிருப்பேன்

இடையில் கொஞ்சநேரம்
யார் தோளிலாவது
சாய்ந்துகொள்ளவேண்டும் போலிருக்கும்

நான் இந்தச் சுவரில்
சாய்ந்துகொள்வேன்

ஒன்றுமில்லை
அதற்குமேல்
ஒன்றுமே இல்லை

One Comment on “மனுஷ்ய புத்திரன் கவிதை”

Comments are closed.