ஈரம் படரும் பூமி

வசந்ததீபன்

உதடுகளை  விரிக்கிறாய்

தேநீர்  கோப்பையை  ஏந்துகிறாய்

சுவை  ஆறுவதற்குள்  அருந்தி  விடு.

நீ  பரிசளித்த  பூவை  எங்கு  வைப்பேன்

இதயம்  கனன்று  கொண்டிருக்கிறது

இப்போதைக்கு  என்  உதடுகளில்  இருக்கட்டும்

கருணை  ததும்பும்  ஈர  மனசுகளால்  தான்  கவிதையின் 

 உள்ளார்ந்த  உணர்வு  இழைகளை

ஸ்பரிசிக்க    இயலும்.

பசித்த  பூனை

தனித்த  குருவி

வேட்டை  முடிந்து  போனது.

மழையோடு  நடக்கிறேன்

மழை  என்னோடு  நடக்கிறது

யாரும்  யாரோடும்  பேசவில்லை

குளத்தில்  இறங்கினாள்

குளம் ஆரத்தழுவியது

குளத்தில்  தேவமலர்  ஒன்று  பூத்தது

மீன்கள்  திகைத்தன

குளம் குதூகலித்தது

மீனானாள்  அவள்

வெங்காயம்  உரிக்கிறார்கள்  விஞ்ஞானிகள்

மாவு  பிசைகிறார்கள்  மேதைகள்

தினம்  புரோட்டா  தின்று  உறங்கிப்  போகிறார்கள்  ஜனங்கள்.

மதுப்புட்டிகள்  என்னிடம்  இல்லை

கஞ்சாத்தூள்  அடைத்த  சிகரெட்கள்  நிரம்பிய  பாக்கெட்  இல்லை

நேசம்  நிறைந்த  கொடுமை  கண்டு  கொந்தளிக்கும் 

இதயம்  மட்டும்  உண்டு.

ஈரம் படரும் பூமி

வசந்ததீபன்

உதடுகளை  விரிக்கிறாய்

தேநீர்  கோப்பையை  ஏந்துகிறாய்

சுவை  ஆறுவதற்குள்  அருந்தி  விடு.

நீ  பரிசளித்த  பூவை  எங்கு  வைப்பேன்

இதயம்  கனன்று  கொண்டிருக்கிறது

இப்போதைக்கு  என்  உதடுகளில்  இருக்கட்டும்

கருணை  ததும்பும்  ஈர  மனசுகளால்  தான்  கவிதையின் 

 உள்ளார்ந்த  உணர்வு  இழைகளை

ஸ்பரிசிக்க    இயலும்.

பசித்த  பூனை

தனித்த  குருவி

வேட்டை  முடிந்து  போனது.

மழையோடு  நடக்கிறேன்

மழை  என்னோடு  நடக்கிறது

யாரும்  யாரோடும்  பேசவில்லை

குளத்தில்  இறங்கினாள்

குளம் ஆரத்தழுவியது

குளத்தில்  தேவமலர்  ஒன்று  பூத்தது

மீன்கள்  திகைத்தன

குளம் குதூகலித்தது

மீனானாள்  அவள்

வெங்காயம்  உரிக்கிறார்கள்  விஞ்ஞானிகள்

மாவு  பிசைகிறார்கள்  மேதைகள்

தினம்  புரோட்டா  தின்று  உறங்கிப்  போகிறார்கள்  ஜனங்கள்.

மதுப்புட்டிகள்  என்னிடம்  இல்லை

கஞ்சாத்தூள்  அடைத்த  சிகரெட்கள்  நிரம்பிய  பாக்கெட்  இல்லை

நேசம்  நிறைந்த  கொடுமை  கண்டு  கொந்தளிக்கும் 

இதயம்  மட்டும்  உண்டு.