சசிகலா விஸ்வநாதன்/விழைவு

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
புதன் கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு



அழகிய சிங்கரின் என்பா சரமாக
( 1 )
அலைகடல் கடக்கலாம்; ஆசைஉண்டாயின்;

அகண்டமும் தாண்டலாம்;
மனவுறுதி இருப்பின்;

உடல் வலு ஒரு பொருட்டாகுமோ;

மனம் விழைந்து ஓங்க!
(2)
மன விழைவு ஓங்கி
வர;

வினைகளின் தொல்லை விளைவுகள், தேர்ந்து

விலக்கப்படும்.விரைவின் விசை கூடும்.

மனம் கூர் முனைப்படும்.
‌(3)
கூர்முனை அம்பு இலக்கைத் தவறாது,

விரைவில் அடையும், பெருமை அடையும்.

அகிலம் வியக்க
வித்தைகள் புரியும்.

இறையும் துணை நிற்கும்.


10-1-2024