பி. ஆர். கிரிஜா/அனுமன்

உலகை உய்விக்கும்
அருட் தெய்வமே !
பணிவின் உறைவிடமே !
தங்கக் கவசமணிந்து
அனைத்துயிரையும்
காக்கும் உத்தமனே !
ராமனிடம் கை கூப்பி
வரம் கேட்பவனே !
நோய் நொடி , நுண் கிருமி அகன்றிட ,
ஆனந்தம் பொங்கிட
இவ்வையகம் தழைத்திட , அவனியில் அமைதி நிலவிட ,
அஞ்சனை புத்திரனே
எனதருமை ஆஞ்சநேயனே !
சிரம் தாழ்த்தி
நின் தாள்
பணிகின்றோம் !


11/01/2024
7 15 am