எஸ்ஸார்சி/இயற்கை

இணைய கால கவியரங்கம்8
10/1/24

வனம் ஒன்றில்
சிங்கம் புலி ஆனை
என வரிசையாய் வாழலாம்
காட்டுப்பூனை
காட்டு எருமை
காட்டு நாய் என்று
அங்கிருக்கத்தான் செய்யும்
சிங்கத்தால் பூனையை
எருமையை நாயை
அடித்துத் தின்னமுடியும்
ஆனால்
பூனையாக எருமையாக
நாயாக தன் உருவை
மாற்றிக் காட்ட முடியாது
சிங்கம் சிங்கமாய் வாழ
பூனை ஆனை நாய்
அது அதுவும் அது அதுவாய் வாழத்தான்
விதித்திருக்கிறது இயற்கை.