செ.புனிதஜோதி கவிதை

நல்லநாளும்
அதுவுமா
நம் வீட்டுல
இருக்காம
வெளியில போவது
நல்லாவாயிருக்கு
அடிக்கடி சொல்லும்
பக்கத்துவீட்டு
ஜெயா அக்கா

இப்ப
மருத்துவமனையில்

ஆனாலும்
அவள்
பூட்டிய
வீட்டிலிருந்து
கசிகிறது
பொங்கலின் மணம்

One Comment on “செ.புனிதஜோதி கவிதை”

Comments are closed.