
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
திங்கட்கிழமை
இணைய கால கவியரங்கம்
மாலை மணி 5.15
கவிதையின் தலைப்பு
அழகியசிங்கரின் என்பா சரமாக
பூசலார் கட்டினார்
மனக் கோயில்
செப்புக் காசு செலவு இல்லாமல்;
யார் அறிந்தார்
அதை அவரின்றி;
அவன் அறிந்தான் அன்றோ!
அவன் அறிந்ததாலன்றோ அவனியும் அறிந்தது!
இன்று நாமும் ஆக்கினோம் கோயில்
ஒன்று; பால ராமனுக்கு
அயோத்தியில்
குறை ஒன்றுமில்லை, நமக்கு.
அவனுக்கு ஒரு மனக்கோயில் கட்டி,
அவனை தினமும் அகலாது வாழ்த்தி,
வாழ்வின் துணையாக கொள்வோம்; என்றும்
கொள்ளை இன்பம் நமக்கு.
இருமை நீக்கும் சூரிய மைந்தனை;
இம்மையில் மங்கலம் பலவும் பெற்று,
செம்மையாய் வீடு பேறும் பெற;
சேவித்து அடி பணிவோம்.
22-1-2024
