- சீசனில் அவசர அவசரமாக கச்சேரிக்குப் போனான். கேண்டீன் வாசலில் நின்ற வரிசையைப் பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்துவிட்டான்!
- திருமணம் செய்துகொள்ளலாமா? கேட்ட மறுகணம் அவர்கள் காதல் மறைந்தது.
- பிறந்தது முதல் பாட்டியின் கைவைத்தியம்தான் இவனுக்கு! இன்று பாட்டியைக் கைத்தாங்கலாக அழைத்துச்செல்கிறான் மருத்துவமனைக்கு!!
- அருகில் அமர்ந்திருந்தவனுக்குக் கால்கள் இல்லை… தியேட்டரில் பேய்ப்படம்!
- புத்தகக் கண்காட்சி. புத்தகம் வாங்க ஏராளமான கும்பல் – பிளாட்ஃபாரப் பழைய புத்தகக் கடைகளில்!
One Comment on “ஜெ.பாஸ்கரன்/சொடுக்குக் கதைகள்”
Comments are closed.
Excellent