ஜெ.பாஸ்கரன்/சொடுக்குக் கதைகள்

  1. சீசனில் அவசர அவசரமாக கச்சேரிக்குப் போனான். கேண்டீன் வாசலில் நின்ற வரிசையைப் பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்துவிட்டான்!
  2. திருமணம் செய்துகொள்ளலாமா? கேட்ட மறுகணம் அவர்கள் காதல் மறைந்தது.
  3. பிறந்தது முதல் பாட்டியின் கைவைத்தியம்தான் இவனுக்கு! இன்று பாட்டியைக் கைத்தாங்கலாக அழைத்துச்செல்கிறான் மருத்துவமனைக்கு!!
  4. அருகில் அமர்ந்திருந்தவனுக்குக் கால்கள் இல்லை… தியேட்டரில் பேய்ப்படம்!
  5. புத்தகக் கண்காட்சி. புத்தகம் வாங்க ஏராளமான கும்பல் – பிளாட்ஃபாரப் பழைய புத்தகக் கடைகளில்!

One Comment on “ஜெ.பாஸ்கரன்/சொடுக்குக் கதைகள்”

Comments are closed.