000
தெருவில் அடிபட்டுக் கிடந்த நாயை இழுத்து ஓரமாய்ப் போட்டபின் பிண ஊர்வலம் போனது.
000
(2)
தரைக்கடைக் கிழவியிடம் பேரம் பேசி வாங்கிய பத்துரூபாய் காசைப் பேரனிடம் தர பைவ் ஸ்டார்தான் வேணும் காசு வேண்டாமெனத் தூக்கி எறிந்தான்.
(3)
சூடா சம்சா கொடுங்க என்று வாங்கி ரசித்து சாப்பிட ஆரம்பித்தார் இன்னொரு கடை பலகார மாஸ்டர்.
(4)
அநியாயமாய் சம்பாதித்த ஆறுகோடியில் அபார்ட்மெண்ட் கட்டி அறிவு என மகன் பெயரைச் சூட்டினார். அன்று இரவு பலநாள் பகையில் அறிவை வெட்டிக் கொன்றனர்.
(5)
சித்தர் ஒருவரிடம் போய்
நான் மிகப் பிரபலமான எழுத்தாளர் என்றார்.
அப்புறம் ஏன் என்னைப் பார்க்க வந்தாய்? என்றார் சித்தர்.