சசிகலா விஸ்வநாதன்/நல் இருப்பு

கடமை உணர்த்தும்
கர்த்தனாய் இரு;

சங்கை நீங்கிய
சமர்த்தனாய் இரு;

பொய்மை நீத்த
மெய்யனாய் இரு;

மும்மலம் களைந்தவனாய் இரு.
🌺

முற்றுக் கதிராய் வணங்கி இரு.

பற்று விட்ட பரமனாய் இரு.

முக்தனாய் இரு‌.
சக்தியாய் இரு.

வல்லவனான
நல்லவனாய் இரு.
🌺
நேர்மையானவனாய் இரு.
கூர்மையானவனாய் இரு.

வாய்மையானவனய் இரு.
தாய்மையானவனாய் இரு‌.

ஒரஞ்சாராதவனாய் இரு.

மாண்புடையவனாய்
இரு.

நேர்கொண்ட பார்வையானவனாய் இரு.
🌺
சொல்லும் சொல்லில் திடமாய் இரு.

செய்யும் செயலில் செம்மையாய் இரு.

மண்ணில் நல்ல புண்ணியனாய் இரு.

மகாத்மா ஆகாவிடினும்
மனிதனாயிரு.

சசிகலா விஸ்வநாதன்
30-1-2024
( இன்று தேச பிதாவான மகாத்மாகாந்தியின் நினைவுநாள்
நினைவில் நிறுத்துவோம் அவர் போதனைகளை )