அழகியசிங்கர்/பழங்கள்

பழங்களை வாங்கிக் கொண்டு நடந்து வந்தாள் சிவகாமி. கூடை நிறைய பழங்கள். உடல் நிலை சரி இல்லாத ராமு தாத்தாவைப் பார்க்க வந்திருந்தாள். பக்கத்திலேயே அந்த ஊரில் சிறப்பு வாய்ந்த அந்தப் பழ மண்டி.

அந்த ஊருக்கு பஸ்ஸில் வரும்போதே பார்த்து விட்டாள். ராமு தாத்தாவுக்கு பழங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்க அவள் ஊருக்கு வரும்போது பழம் வாங்கிக்கொண்டு வருவது அவர் வழக்கம். இந்தப் பழ மண்டியிலிருந்துதான் வாங்கிக்கொண்டு போவார்.
சில மாதங்களாக உடல் நிலை சரி இல்லாமல் அவதி பட்டுக் கொண்டிருந்தார். கேள்விப்பட்டு இந்த நிலையில்தான் சிவகாமி அவரைப் பார்க்க வந்திருக்கிறாள்.

ராமு தாத்தாவைப் பார்க்க சிவகாமி அவர் வீட்டிற்குள் நுழையும்போதுதான் அவரைப் பற்றிய செய்தி அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.