
ஒரு பெரும் மழைக்காலத்தை
தேக்கி வைத்திருக்கின்றன
விழிகள்
ஊதற்காற்று வந்து
உரசுவதற்காகத்தானே
காத்திருக்கின்றன
எப்போதும் மேகங்கள்
நீ இரண்டு கரங்களையும்
விரித்து ஏந்தும் போது
அதில் பொழியும் துளிகள்
அவைகளை கடலென
நினைத்துக்கொள்ளும்
பின்பு அதிலிருந்து அலைகள்
எழும்பும்
. ஓயாத அலைகள் புரவிகளாக
கோடிக்கணக்கில்
கிளம்பி வரும்
சிறிய நீல ரப்பர் பந்து போல
இந்த புவி உருண்டை
உன் உள்ளங்கைகளில்
மிதந்து கொண்டிருக்கும்
