ஆர்க்கே/பறத்தல் சுகம்!

வானில்
துளித்துளியாய்
கடலிருக்கிறது..!
அதை அருந்த விழைந்து
பறந்து பார்க்கிறேன்.

கடற்பரப்பில்
மடல் மடலாய்
வானமிருக்கிறது..!
அதை அளக்க நினைத்து
தவழ்ந்து பார்க்கிறேன்.

காற்றின்
போக்குப் பாதையில்
என் சிறகுகளை
சிலிர்த்துதறி
உலர்த்தப் பார்க்கிறேன்..!

மற்றவர்கள்
பறக்குமிடத்தில்
நீந்துகிறேன்.
மற்றவர்கள்
நீந்துமிடத்தில்
பறக்கிறேன்.
—— அன்புடன்!