சுரேஷ் ராஜகோபால்/விடிகாலை கனவு

செதுக்கி வைத்த சிலையொன்று
செப்போ தகரமோ இல்லை
பதுக்கி வைத்த பணமெல்லாம்
ஓரிரவில் காணாமல் போனதே
ஒதுங்கிப் போனாலும் விடவில்லை
என்ன சொந்தமோ தெரியாது. 1

எக்குத் தப்பாகக் கனவுகள்
அவனுக்கு விழித்த பின்னே
சுற்றி வலம் வந்தன
விடிகாலையில் கனவு பலிக்குமோ
என்னமோ தெரியாது. 2


சிட்லபாக்கம்
06 02 2024 மாலை 05.15