கலைச்செல்வி/சொன்னால் புரியாது


கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு என் பால்ய தோழன் அழைத்திருந்தான்
நிறைய பேசிக் கொண்டோம்

இறுதியாக அவன் கேட்டான் இன்று ஏன் ஒருமுறை கூட செல்லமே என்று கூறவில்லை என்று

இந்த இடைவெளியில்
செல்லமே கனிந்து அன்பாக மாறிவிட்டிருந்தது அவனுக்கு தெரியவா போகிறது.?

கடைசியாக நான் அவனை செல்லமே என்பதில் தானே விட்டு வந்திருந்தேன்
அதனால் பாவம்
அவன் அங்கேயே நின்று
கொண்டிருந்திருக்கிறான்
இத்தனை நாளும்.


9.2.2024