கலைச்செல்வி/இது தான் இப்படித்தான்

கொஞ்சம் கூட நாசூக்காக எழுதத் தெரிவதில்லை எனக்கு
எப்போதும் ஏதாவது தத்துவம்
எப்போதும் ஏதாவது நிகழ்வு
எப்போதும் ஏதாவது
கனவு
இப்படித்தான் போகிறது
என் கவிதைகள்
நாசூக்காக எழுதுவது என்றால் என்னவென்று
சொல்லுங்கள் என்று கேட்டேன் என் ப்ரியமான கவிஞரிடம்
அவர் சொன்னது
இது தான் கொஞ்சம்
கவலையிலிருந்து தள்ளிப் போய்க் கவிதைக்குள்
கவிதையாய்
இருந்து விடுவது தான்
என்கிறார்

11.2 2024