புவனா சந்திரசேகரன்/தினமும் கதவைப் பூட்டிக்கொண்டு வாருங்கள்!

அழகிய சிங்கரின் என்பா

தினமும் கதவைப் பூட்டிக்கொண்டு வாருங்கள்!

கவிதைகள் எழுதலாம்! கருத்துகள் பகிரலாம்!

எத்தனை கவலைகள்! எத்தனை வேதனைகள்!

என்பாவில் அனைத்தையும் தொலைத்திடுவோம்!

  1. தினமும் கதவைப் பூட்டிக்கொண்டு வாருங்கள்!

தித்திக்கும் நினைவுகளைக் கவிதையில் வடிப்போம்!

புதியதோர் உலகத்தைக் கற்பனையில் படைத்து

முதுமையில் புதுமை செய்வோம்!

3.தினமும் கதவைப் பூட்டிக்கொண்டு வாருங்கள்!

மனக்கதவு திறந்திருந்தால் குப்பைகள் சேர்ந்துவிடும்!

குப்பைகளை அகற்றித்
தூய்மை படைத்திடவே

வரவேற்போம் நல்ல சிந்தனைகளை!