இன்று கோவில் பிரகாரத்தில் என்னைப் போலவே ஒருத்தியைப் பார்த்தேன்
நிறைய ஒற்றுமைகள்
என்னைப் போலவே கண்கள்
என்னைப் போலவே
சற்று குள்ளம்
என்னைப் போலவே உடனிருக்கிற மனிதர்களைச் சந்தோசமாக வைத்துக் கொண்டாள்.
ஏன் யாரோ ஒருத்தியிடம் என்னைப் பார்க்கிறேன்.?
என்னைத் தேடுகிறேன்.? சிரிப்பாக இருந்தது.
அவள் எழுந்து போய் அணைய இருந்த விளக்கிற்கு கொஞ்சம் எண்ணெய்விட்டு
இரண்டு கைகளாலும்
பொத்தி வைத்து
நின்றெரியச் செய்துவிட்டு
போய்விட்டாள்
12.2.2024