அதங்கோடு அனிஷ் குமார்/பெயரில் என்ன இருக்கிறது?

தலை குனிந்து

தாள் தொடும் அளவில்

வணங்கி மகிழ்வார்

வணங்காமுடி.

அரைநூற்றாண்டுக்கும் மேலாக

ஆஸ்பத்திரி வாசம்

ஆரோக்கியசாமிக்கு.

பிச்சையெடுக்கும் அளவுக்கு

நொடிந்து போனார்

கோடீஸ்வர ராஜராஜன்.

பாவங்கள் பல செய்து

பலரிடம் வாங்கி கட்டிக் கொண்டார்

புண்ணியமூர்த்தி.

தோல்விகள்

தோளில் அமர

தடுமாறிப் போனார்

வெற்றிவேந்தன்.

போதும்பெண்ணுக்கு

போதும் போதும் எனும் அளவிற்கு

பெண் குழந்தைகள்.

எல்லாம் விதியென

தன்னையே இழப்பார்

மதியழகன்.

தன் பெயரை

தமிழில் எழுத

தடுமாறுவார்

தமிழரசன்.

அது சரி

பெயரில் என்ன இருக்கிறது?

          —

One Comment on “அதங்கோடு அனிஷ் குமார்/பெயரில் என்ன இருக்கிறது?”

Comments are closed.