பத்து வரி கவிதை
தெருவில் பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது .
கருவில் இருந்த குழந்தை உதைக்க,
காற்றின் இதம்,
மாற்றியது,மனதை.
செறுவைத் தணித்தது;
இருந்தாலும், பெயரிடுவது;
“பெரும் பாடு”என்றே ஆகியது.
திடுமென பஸ் ஏறி இறங்கியதில்,
பிரசவ நோவு; மருத்துவமனையில் நான்.
சற்றே நேரத்தில் சிறு மதலை.
பெயர் என்னம்மா?
செவிலியின் குரல்.
“செண்பகம்”! அம்மாவின் பெயர்தான்!
26-2-2024