சசிகலா விஸ்வநாதன்/தெருவில் பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது

பத்து வரி கவிதை

தெருவில் பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது .

கருவில் இருந்த குழந்தை உதைக்க,

காற்றின் இதம்,
மாற்றியது,மனதை.

செறுவைத் தணித்தது;
இருந்தாலும், பெயரிடுவது;

“பெரும் பாடு”என்றே ஆகியது.

திடுமென பஸ் ஏறி இறங்கியதில்,

பிரசவ நோவு; மருத்துவமனையில் நான்.

சற்றே நேரத்தில் சிறு மதலை.

பெயர் என்னம்மா?
செவிலியின் குரல்.

“செண்பகம்”! அம்மாவின் பெயர்தான்!


26-2-2024