கலைச்செல்வி/சகி ….சகி..


நேற்று ஒரு நான்கு
வரிகள் எழுதினேன்
இன்று ஒரு நான்கு வரிகள் எழுதியிருக்கிறேன் இரண்டு நான்கு வரிகள் ஒன்று சேர்ந்து
எட்டாகி விட
ஒரு கோர்வை
வந்துவிடுகிறது

நேற்று எழுதியது நெருக்கத்தைப் பற்றியது
இன்று எழுதியது
விலகலைப் பற்றியது

நெருக்கத்தையும்
விலகலையும் எழுதுவதற்கு
இரண்டு நாட்கள் ஆகிறது
பிறகெப்படி ஒரு கவிதை
எழுதப்போகிறேன் நான்.??

கவிதை எழுதுவது
கொஞ்சம் கடினம்தான்
ஆனால்
நெருக்கத்திற்கும்
விலகலுக்கும் இடையில் இருப்பது இப்போதைக்கு
இரண்டு நாட்கள் அவ்வளவுதான்…


28.2 2024