G முத்துசாமி
தெருக்கள் எங்கும்
சுற்றி சுற்றி வந்தது
மழை நீர்!
தான் வடிந்து போகும்
இடம் தெரியாமல்!
சில வீடுகளில்
படிகளை முட்டிக் கேட்டது,
‘எங்கே என் வழியைத்
தொலைத்து விட்டீர்கள்? ‘
பதில் தெரியாமல்
பரிதவிக்கும் முகங்களைப் பார்த்து,
இரக்கங் கொண்டு,
தானே பின்வாங்கித்
தன் தொலைந்த வழியை
மீண்டும் தேடத் தொடங்கியது
மழை நீர்!

நீரைப் பற்றி நீர் வடித்தது, வடியாமல் நின்றதுவே!
சிவாயநம. நன்றி சிவகுமார் ஐயா