நகுலனின் சுருதி கவிதைகள்

வரையறை

தலையும் வாலும் 

இல்லாத பிழைப்பு 

என்று 

சொல்லிச் சிரித்தார் 

சச்சிதானந்தம் பிள்ளை 

கேட்டு நின்றவனுக்கு 

ஒன்றும் புரியவில்லை.

சந்தை

செத்த வீட்டில் 

துக்கம் விசாரிக்கச் 

சென்று திரும்பியவர் 

சொன்னார் 

“செத்த வீடாகத் 

தெரியவில்லை 

ஒரே சந்தை இரைச்சல்”