டி வி ராதாகிருஷ்ணன்/இனிக்கும் தமிழ் – 203


சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள

அறையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே?

பெண்கள் அறையில் ஒதுங்கிக் கிடந்தால் தீட்டு, அவர்கள் குளிக்கும் அறையில்
குளித்தால் தீட்டு, தாரைத் தப்பை சப்தத்துடன், பிறந்தால் தீட்டு,
இறந்தால் தீட்டு என்று சொல்கின்றீர்களே! இவ்வுடம்பில் உயிரில் உள்ள
தீட்டோடு தானே ஈசன் பொருந்தி இருக்கின்றான். அதனை அறியாமல் தீட்டு என்று
ஒதுக்குவதில் என்ன பயன் கண்டீர்கள்?

                          –