வினோத் பரமானந்தன் கவிதை

அவள்…
ஆதாம் காலந்தொட்டே
அனைத்திலும் பாதி…

அன்னை, தங்கை,மனைவியென
முப்பரிமாணத்திற்கு
மட்டுமல்ல,
எப்பரிமாணத்திற்கும்
ஏற்றவள்..

மகரந்த மனங்கொண்ட
பேராற்றலின்
பெருமித சுயம்பு
அவள்…

பாத்திரப் பளபளப்பில்
பாதிவாழ்வைத்
தொலைக்கும்
விசித்திரம் அவள்…

அகத்திலும், புறத்திலும்
வண்ணங்களாயிரம்
கொண்ட சித்திரம் அவள்…

சங்கடங்களை சகிக்கப்
பழகிய சாகசம் அவள்…