அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 6 -8/3/24
————
தொப்புள் கொடி வழி
துடிப்பை வளர்த்து
மாதங்கள் பத்து
மனதிலும் சுமந்து
வீறிடும் மகவின்
விம்மல் அடக்கி
மடியினில் சாய்த்து
மார்பினில் தேக்கி
மற்றொரு உயிரை
மன்பதைக் களிக்கும்
பெண்ணினும் ஆற்றல்
பெற்றவர் உளரோ
———