நாகேந்திர பாரதி/பெண் என்னும் பேராற்றல்

அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 6 -8/3/24

————
தொப்புள் கொடி வழி
துடிப்பை வளர்த்து

மாதங்கள் பத்து
மனதிலும் சுமந்து

வீறிடும் மகவின்
விம்மல் அடக்கி

மடியினில் சாய்த்து
மார்பினில் தேக்கி

மற்றொரு உயிரை
மன்பதைக் களிக்கும்

பெண்ணினும் ஆற்றல்
பெற்றவர் உளரோ

———