ஹரணி கவிதை

ஈனுதல் அவளே
ஈனுமுன் இமை சோராது
காத்தலும் அவளே..
இணை நிழலாய் இழைந்து ஏற்றியவளும்
அவளே..
பார்வை கவசத்துள்
பக்குவமாய்ப் பராமரித்தவளும் அவளே..
பைந்தமிழ் சொல்லெடுத்துப் பசும்பாலெனப் பல்கலைக் கற்றுத் தந்தவளும் அவளே..
இப்படி எனைக்காத்த என் அம்மாவிற்கும்..
என் பிள்ளைகளை இப்படிக் காத்த என் மனைவியாகிய அம்மாவிற்கும்..
வேறிடம் மணமுடித்துப் போய் இப்படித் தன் பிள்ளைகளைக் காத்த என் சகோதரியாகிய அம்மாவிற்கும்..
இப்படியாத் தன் பிள்ளையை ஈன்றெடுத்துப் பேணும் என் மகளாகிய அம்மாவிற்கும்..
தாய்மைப் பண்பின் மேன்மையுற மகளிர் நாளில் மனமுவந்து
போற்றி நிறைதல்
பெரும்பேறாம்.