அழகியசிங்கர்/கவிதை

கவிதையைப் பார்த்து
நீ என்னிடம் ஏன் வருவதில்லை
என்று கேட்டேன்
நீ என்னைக் கூப்பிடவில்லை
என்று பொய் சொன்னது கவிதை

வேடிக்கை
இந்தக் கவிதை!

இளம் பெண்களைப்
பார்த்து ஓடுகிறது கவிதை
சற்று வயதானவன்
என்றால் எள்ளி நகையாடுகிறது

எங்கள் தெருவில்
பைக் ஓட்டும் இளம் பெண்கள்
கவிதையைச் சீண்டுவதில்லை

இதை
என்னிடம் சொல்லி
முணுமுணுக்கிறது கவிதை

இதற்கு நான்
என்ன
செய்ய முடியும்