நாகேந்திர பாரதி கவிதை 

வெடித்த மலையின்
விரிசல் பாறையிலும்

வறண்ட ஆற்றின்
குழிந்த மண்ணிலும்

சிதைந்த கோயிலின்
துருத்தும் கல்லிலும்

இடிந்த வீட்டின்
குட்டிச் சுவற்றிலும்

கட்டிய கரங்கள்
மட்டும் அல்ல

கண்ட கனவுகளும்
சேர்ந்தே தெரியும்