தங்கேஸ் கவிதை

சிகரெட் புகை கசியும்

நான்கு சுவர்களுக்குள்

நொண்டியடித்தபடியே

சுற்றி வந்து கொண்டிருக்கிறது

அகலமுடியாத ஒரு பெருங்கனவு

விரித்த உடன்

பார்க்க முடியாமல்

விழிகளை ஏமாற்றிப்

 போய்விடுகிறது

குடைக்குள் அடைபட்டருந்த

நீல வானம்

நீர்க்குமிழ்களுக்குள்

வெறித்தபடி 

முழித்துக்கொண்டிருக்கும்

ஞாபகங்களை

சத்தமில்லாமல்

கொத்திக்கொண்டு

 போய் விடுகிறது

அதிராத காற்று

ஈன்று புறம் தந்த

பசுங்கொடிகள் பரிதவிக்க

கண்முன்னமே

கனவுபோல

உதிர்ந்து கொண்டிருக்கிறது

சங்கு  போன்றவெள்ளைப்பூ

 நடக்கும் போதே

திகைத்து நிற்க

 நட்டநடு வனாந்தரத்தில்

இறக்கிவிட்டு விட்டு

சொல்லாமலே

 போய்கொண்டேயிருக்கிறது

இவ்வளவு நேரம் 

உன்னை கைபிடித்து

அழைத்து வந்த நினைவு

One Comment on “தங்கேஸ் கவிதை”

Comments are closed.