சுரேஷ் ராஜகோபால், /”சிரிப்பு வரும் நேரம்”

விருட்சம் சொல் புதிது வழங்கும் இணைய கால 13வது கவியரங்கம், நாள் 17 03 2024 கிழமை ஞாயிறு நேரம் மாலை 05.30 “சிரிப்பு வரும் நேரம் ” என்ற எனது கவிதையை படிப்பது சுரேஷ் ராஜகோபால், சிட்லபாக்கம், சென்னை.

சிரிப்பு வரும் நேரம்
அடக்க முயன்றேன்
முடியாத போது
பீரிட்டு வந்தது சிரிப்பு
சிரித்து விட்டேன்
சிந்தனை இழந்து
என்னை மறந்து
லயித்துவிட்டேன் சிரிப்போடு. 1

தனியே சிரிப்பது கண்டு
சுற்றி இருந்தவர்கள்
ஒருமாதிரி பார்த்தனர்
மறை கழன்றவர் என்றே நினைத்தனர்
என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை
தனியே சிரித்துக் கொண்டே இருந்தேன்
மற்றவருக்கு என்நிலை புரிவதில்லை
என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 2