வருகைக்காய்…


ஶ்ரீதர்

தாயின் குரல் கேட்கா
சேய் போல்
கண்ணவன்  விரல் தொடா
மங்கை போல்
கருத்து அழுது கிடந்தன
மேகங்கள்!

மடி கிடைத்த மகவாய்
மதுவுண்ட  மலராய்
அவன் இதழுண்டு
கண் சிரித்த அவளாய்
கதிர் விரித்து
வான் சிரிக்குது அழகாய்!