சசிகலா விஸ்வநாதன்/கைப்பை கனமானது

செவி இனிக்க பகடி பேசி,
கண் நீர் சுரக்க சிரித்து,
மனது இனிக்க உறவாடி,
நா அசையா நிலை…
நாள்கள் ஏழின் இருப்பு
நினைவின் நடுவே…
கனவாய்.‌‌…
அடி மனப் பேழையில்
சுருண்ட மகிழ மலர் சரத்தை,
மீட்டெடுத்து கட்டி வைத்தேன் என் கைப்பையில்…
கனக்கிறது… அன்பின் சுமை.