நான்
குருவிகளைப்
பார்த்து
பல ஆண்டுகள்
ஓடி விட்டன
ஆனால்
புறாக்களின்
தொந்தரவு
தாங்க முடியவில்லை
புறாக்களின்
சாமர்த்தியம்
குருவிகளுக்கு வராது
எப்போதும்
குருவிகள்
கீச்கீச்சென்று
சத்தம் போடுமே தவிர
தொந்தரவு
செய்யாது
குளிக்கும் பாத்ரூமில்
இடுக்கில்
நுழைந்து
குஞ்சு பொறிக்க
சாமர்த்தியம்
போதாது
குருவி சாது
அதற்குத் தெரியாது
புறாவின் சாமர்த்தியம்
ஏனோ
மனிதர்களிடம்
ஒட்டாமல்
அந்த இனம்
போய் விட்டது
நீண்ட
காலமாய்
குருவியைத் தேடிக்
கொண்டிருக்கிறேன்!
ஆனால்
என்றோ குருவிகளைப்
பார்த்த
ஞாபகம் இருந்
து
கொண்டிருக்கிறது